Thursday, February 27, 2014

இயக்குனரை மாமா என்று அழைக்கும் நடிகை!

நாடோடியாய் தமிழ் சினிமாவில் நுழைந்து, எங்கேயோ சென்று எப்போதும் போல் வலம்வந்து புலிவாலை பிடித்த மலையாள நடிகை தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரத் தொடங்கிவிட்டார். தற்போது இவர் கைவசம் ஒருசில படங்கள் இருந்தாலும், தன்னை தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்திய சுப்ரமணியத்தாரை தினமும் நன்றியுடன் நினைவு கூர்கிறாராம். 

இவரை எப்போதும் மாமா என்றுதான் உரிமையோடு அழைப்பாராம். தன்னுடைய குருவாகவும், வழிகாட்டியாகவும் அவரைதான் நினைவில் வைக்கிறாராம். தன்னுடைய குருநாதரை பின்பற்றி நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பு, இயக்கம் என சினிமாவின் மற்ற துறையிலும் கால் பதிக்க முடிவு செய்துள்ளாராம்.