Saturday, February 22, 2014

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் மாடு முட்டி சிறுவன் பலி

திண்டுக்கல் அருகே உள்ள கிராமம் தவசிமலை. இங்குள்ள கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை ஏராளமான இளைஞர்கள் அடக்க முயற்சி செய்தனர். இதில் 18க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

ஒரு காளை திறந்து விட்டதும், சீறிக்கொண்டு பார்வையாளர்கள் பகுதிக்கு சென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களை முட்டித்தள்ளியது. இதில் சிவக்குமார் என்ற 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.