Saturday, February 22, 2014

ஜி-20 கூட்டத்தில் பங்கேற்கும் நிதி மந்திரி ப.சிதம்பரம் சிட்னி நகரம் வந்தடைந்தார்


‘ஜி-20’ என்றழைக்கப்படும் வளரும் நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் பிரபல வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கலந்தாலோசிக்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இன்று சிட்னி நகரை வந்தடைந்தார்.

சர்வதேச நிதியத்தில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ள இக்கூட்டத்தில் நாளை பங்கேற்கும் அவர் 3 நாட்கள் இங்கு தங்கி சவுத் வேல்ஸ் நாட்டின் அரசு பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டு நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

பிரபல தொழிலதிபர்களுடனான வட்ட மேஜை சந்திப்பில் பங்கேற்கும் ப.சிதம்பரம், முதலீட்டாளர்கள் சிறப்புக் கூட்டத்திலும் சிறப்புரையாற்றுகிறார். வரும் 25-ம் தேதி சிட்னி நகரில் இருந்து புறப்பட்டும் அவர் இந்தியா சென்றடைகிறார்.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் நிதி மந்திரியுடன் சிட்னி நகருக்கு வந்துள்ளனர்.