Sunday, February 23, 2014

சோனியாவுடன் சந்திரசேகர ராவ் திடீர் சந்திப்பு


தெலுங்கானா மாநிலம் அமைக்க முழு முயற்சி மேற்கொண்ட சோனியா காந்தியை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்துடன் சந்தித்தார்.

அப்போது அவருக்கு தெலுங்கானா மக்களின் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக ராவ் தெரிவித்தார். ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவை பிரிக்க சோனியா எடுத்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என ராவ் மேலும் கூறினார்.

பின்னர் செய்தியார்களிடம் பேசிய ராவ், சோனியாவுக்கு நன்றி மட்டும் தெரிவித்ததாகவும், வேறு எதுவும் அரசியல் பேசவில்லை என்று தெரிவித்தார். தெலுங்கானா மாநில விவகாரத்தை கவனித்து வந்த திக் விஜய் சிங்குடன் கலந்து பேசி நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என அவர் கூறினார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சத்யநாராயணா கருத்து தெரிவிக்கையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தங்கள் கட்சியுடன் வெகு விரைவில் இணையும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.