Sunday, February 23, 2014

புதுக்கோட்டை வாரச்சந்தையில் பெரும் தீ விபத்து: கடைகள் எரிந்து நாசம்

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வாரச்சந்தை நடைபெறும். இங்கு 120 கடைகள் உள்ளன. இந்த பகுதியில் இன்று மதியம் திடீரென ஒரு கடையில் தீப்பிடித்தது. அந்த தீ அங்கிருந்த மற்ற கடைகளிலும் பரவியது.

கடைகள் பெரும்பாலும் மூங்கில்கள், கீற்றுக் கொட்டைகளை பயன்படுத்தியே அமைந்திருந்தால் பெரும் தீயாக பரவியது. இந்த வாரச்சந்தைக்கு அருகிலிருந்த குடிசைப் பகுதிகளுக்கும் தீ பரவியது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் 5 வண்டிகளின் உதவியுடன் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.

வாரச்சந்தை கடைகளில் சுமார் 20 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளன. மேலும் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.