Sunday, February 23, 2014

ஒரு நிமிடத்தில் 133 தேங்காய்களை வெறுங்கைகளால் உடைத்து வாலிபர் சாதனை

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் நகரில் வசிக்கும் பிரமோத் யாதவ் என்ற வாலிபர் வெறுங்கைகளால் ஓரே நமிடத்தில் 133 தேங்காய்களை உடைத்து சாதனை படைத்துள்ளார். டாமாட்ரி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இச்சாதனையை செய்தார்.

இச்சாதனையை தொடர்ந்து உலக சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது. விரைவில் அவர் லண்டனுக்கு பயணம் செய்து உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரமோத் ஒரு நிமிடத்தில் 100 தேங்காய்களை உடைத்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.