Saturday, February 22, 2014

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மறைவிடம் மீது ராணுவ ஹெலிகாப்டர் குண்டுவீச்சு: 9 பேர் சாவு

வடமேற்கு பாகிஸ்தானின் ஹங்கு மாவட்டம், தால் நகரம் அருகே தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலையில் ஹெலிகாப்டரில் விரைந்த ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்பட்ட வளாகத்தின்மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அங்கு பதுங்கியிருந்தவர்கள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், ராணுவ தாக்குதலில் 9 பேர் இறந்ததாகவும் பாதுகாப்பு படை வட்டாரங்கள் உறுதி செய்தன.