Saturday, February 22, 2014

அருணாச்சலபிரதேசம், அசாம், திரிபுரா மாநிலங்களில் இன்று மோடி பிரசாரம்

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.
வடகிழக்கில் உள்ள 3 மாநிலங்களில் இன்று பிரசாரம் செய்ய அவர் திட்ட மிட்டார்.
அதன்படி நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பசிகாட் பகுதியில் முதலில் பிரசாரம் செய்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
அருணாச்சல பிரதேச மக்கள் துணிச்சலானவர்கள். அவர்கள் சீனர்களை தலை தூக்க விடுவதில்லை. இங்குள்ளவர்கள் சீனாவை பார்த்து பயப்படுவதில்லை. இங்கு நான் கனத்த மனதுடன் வந்துள்ளேன். இம்மண்ணில் பிறந்த மாணவர் டெல்லியில் கொலை செய்யப்பட்ட சம்பவமே அதற்கு காரணம்.
அருணாச்சல பிரதேச மக்களை பார்த்த பிறகுதான் இந்திய பகுதிகளை சூரிய பகவான் பார்க்கிறார்.
உங்களின் மிகப்பெரிய பிரச்சினை வளர்ச்சிதான். மக்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பாரதீய ஜனதா உறுதி பூண்டுள்ளது. இறந்த மாணவனின் குடும்பத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்களது உடலில் ஓடும் ரத்தம்தான் எனது உடலிலும் ஓடுகிறது. பரம்பரை ஆட்சி, சிபாரிசு ஆகியவை வளர்ச்சிக்கு உதவாது. தாமரை ஆட்சி மலர்ந்தால் வளமும், வளர்ச்சியும் பெருகும்.
இவ்வாறு மோடி பேசினார்.
இதைத் தொடர்ந்து அசாம் (சில்சார்), திரிபுரா (அகர்தலா) ஆகிய மாநிலங்களுக்கு சென்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.